தற்போதைய செய்திகள்

ஈரானில் அதிபர் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தினமணி

ஈரானில் அதிபர் பதவிக்கான தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

பொருளாதாரத் தடைகள், மேற்கத்திய நாடுகளின் தனிமைப்படுத்தல் மற்றும் அண்டை நாடுகளுடனான பிரச்னை ஆகியவற்றுக்கு மத்தியில் ஈரான் அதிபர் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஈரான் நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நீடித்தது.காலை 8 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வாக்குச் சாவடிகளுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். பழமைவாதிகள், சீர்திருத்தவாதிகள் என இரு பிரிவுகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிபர் பதவிக்கு 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிபர் தேர்தலோடு மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தலும் இன்று நடைபெற்றது.

தேர்தலில் வாக்களிக்க 5 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர். தேர்தலில் 50.1 சதவீதம் அல்லது அதற்கு மேல் வாக்கு பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். எந்த வேட்பாளரும் இந்த அளவு வாக்குகளை பெறாத பட்சத்தில், இரண்டாம் முறையாக வாக்குப்பதிவு நடைபெறும்.தெஹ்ரான் மேயர் முகமது பாகர் கலிபாஃவ், மதத் தலைவர் ஹஸன் ரவ்ஹானி, முன்னாள் அணுசக்தி தூதர் சயீத் ஜலீல் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு முடிவுகள் நாளை(ஜூன் 15) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT