தேர்தல் நிதியளிப்பு விழா: விருதுநகரில் 29-ம் தேதி மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
விருதுநகர் மாவட்ட திமுக மக்களவைத் தேர்தல் நிதியளிப்பு விழா நிகழ்ச்சியில் வருகிற 29-ம் தேதி திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கயுள்ளார்.
விருதுநகர் மாவட்ட திமுக மக்களவைத் தேர்தல் நிதியளிப்பு விழா நிகழ்ச்சியில் வருகிற 29-ம் தேதி திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கயுள்ளார்.
இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட திமுக செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
விருதுநகர் மாவட்ட திமுக கழகம் சார்பில் கலைஞரின் 90-வது பிறந்த நாள் விழா மற்றும் மக்களவைத் தேர்தல் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் ஆகியவை தேசபந்து மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் திமுக கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை வழங்கயுள்ளார்.
Advertisement
எனவே இக்கூட்டத்தில் பொதுமக்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழகத்தின் பிற அணியினர், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் கழகத்தின் இளைஞரணி செயல் வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.