மதுரை விமான நிலையம் முற்றுகை: தேவர் பேரவையினர் கைது
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டிட வேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்தி
மதுரை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 50 பேர் இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டிட வேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்தி தேவர் பேரவையினர் இன்று திடீரென மதுரை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.