தற்போதைய செய்திகள்

ஓய்வு பெற்ற போலீஸார் சேமநலநிதி கையாடல்: எஸ்பி அலுவலக பணியாளர்கள் 3 பேர் பணி இடைநீக்கம்

கடலூர் மாவட்ட காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸாக்கு சேரவேண்டிய சேமநலநிதி, பணிக்கொடை ஆகிய பணபலன்கள் கையாடல் செய்யப்பட்டது தொடர்பாக

VASUDEVAN.K

ஓய்வு பெற்ற போலீஸாரின் சேமநலநிதி கையாடல் தொடர்பாக எஸ்பி அலுவலக நிதிப்பிரிவு ஊழியர்கள் 3 பேரை பணி இடைநீக்கம் செய்து எஸ்பி ஆ.ராதிகா உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்ட காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸாக்கு சேரவேண்டிய சேமநலநிதி, பணிக்கொடை ஆகிய பணபலன்கள் கையாடல் செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆயுதப்படை போலீஸ் ஏட்டு செந்தில்குமார், பண்ருட்டி போலீஸ்காரர் முரளி ஆகிய இருவரை ஏற்கனவே கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பிரச்னையில் தொடர்புடைய எஸ்பி அலுவலக நிதிப்பிரிவு பணியாளர்கள் மீதும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தநிலையில் இப்பிரச்னை தொடர்பாக எஸ்பி அலுவலக நிதிபிரிவில் பணியாற்றும் கண்காணிப்பாளர் முருகன்(55), காசாளர் ராஜாராமன்(48), இளநிலை உதவியாளர் கார்த்திகேயன் ஆகிய 3 பேரையும் பணி இடைநீக்கம் செய்து எஸ்பி ஆ.ராதிகா  உத்தரவிட்டுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT