விருதுநகரில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டம் : 29 பேர் கைது
விருதுநகரில் தேமுதிகவின் சார்பில் செவ்வாய்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகரில் தேமுதிகவின் சார்பில் செவ்வாய்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் விநாயகம், ஒன்றியச் செயலாளர் பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழக சட்டப்பேரவையிலிருந்து தேமுதிக உறுப்பினர்கள் 6 பேரை ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அதை உடனே தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து, விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீஸார் விரைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 29 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
Advertisement