விருதுநகர் மாவட்ட ஓய்வூதியம் பெறுவோருக்கான நேர்காணல் ஏப்.1 முதல் தொடக்கம்
விருதுநகரில் மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களிலும் ஓய்வூதியம் பெறுவோர் நிகழாண்டிற்கான நேர்காணல் ஏப்-1ம் தேதி தொடங்கி வங்கிகள் வாரியாக குறிப்பிட்டுள்ள நாள்களில் நடைபெற
விருதுநகரில் மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களிலும் ஓய்வூதியம் பெறுவோர் நிகழாண்டிற்கான நேர்காணல் ஏப்-1ம் தேதி தொடங்கி வங்கிகள் வாரியாக குறிப்பிட்டுள்ள நாள்களில் நடைபெற இருக்கிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: இதில், அந்தந்த பகுதிகளில் உள்ள சார்நிலைக் கருவூலங்களில் ஓய்வூதிய புத்தகம் மற்றும் தேசிய வங்கிகளில் செல்லேடு புத்தகம் உள்ளிட்ட விவரங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்.
மேலும், பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்போர் ஏப்.1ம் தேதி முதல் தொடர்ந்து 15-ம் தேதி வரையிலும், இந்தியன் வங்கியில் வைத்திருப்போர் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையும், கனரா வங்கியில் உள்ளவர்கள் 19-ம் தேதி, முதல் 23ம் தேதி வரையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வைத்திருப்போர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையிலும், இதர வங்கிகளில் வைத்திருப்போர் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலும் நேர்காணல் நடைபெற இருக்கிறது.
Advertisement
அதேபோல், மே-1ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலும் அனைத்து வங்களிலும் கணக்கு வைத்திருப்போர் மற்றும் விடுபட்டோர் ஆகியோர் மாவட்டம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் ஓய்வூதியர்கள் அனைவரும் ஓய்வூதியம் சம்பந்தமான அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி சரிபார்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.