முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட இரு போலீஸார் ஆயுத படைக்கு மாற்றம்

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு பகுதியில் இன்று காலை இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் அப்பகுதியில் போக்குவரத்து ஸதம்பித்தது. போக்குவரத்தை

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:02 AM
பகிர்:

சிதம்பரம் அருகே பணியில் இருந்த போது போலீஸ் உடுப்புடன் சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கி சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமைக்காவலர் ஆகிய இருவர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு பகுதியில் இன்று காலை இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் அப்பகுதியில் போக்குவரத்து ஸதம்பித்தது. போக்குவரத்தை சீரமைக்க புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன், தலைமைக்காவலர் பரமசிவம் ஆகிய இருவரை அனுப்பி வைத்தார். அங்கு சென்று பணியில் ஈடுபட்டிருந்த இருவருக்கும் இடையே போக்குவரத்தை சீரமைப்பதில் தகராறு ஏற்பட்டு ஒருவரை தாக்கிக் கொண்டு சாலையில் உருண்டு கட்டிப்புரண்டு சண்டை போட்டுக் கொண்டனர். அப்பகுதியில் மக்கள் இருவரையும் விலக்கிவிட்டுள்ளனர். தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா, ஏஎஸ்பி எம்.துரையை புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சம்பவம் உண்மை என தெரியவந்தததால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன், தலைமைக் காவலர் பரமசிவம் ஆகியோரை உடனடியாக கடலூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவிற்கு மாற்றம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி முருகன் உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →