முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் காங். அலுவலகத்தை முற்றுகையிட வந்த மாணவர்கள் மீது தாக்குதல்

விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி. அலுவலகத்தை முற்றுகையிட வந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

Updated On : 30 மார்ச், 2013 at 1:14 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:33 PM

விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி. அலுவலகத்தை முற்றுகையிட வந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

தமிழீழ விடுதலை மாணவர் இயக்கத்தினர் 20 பேர், காங்கிரஸ்  எம்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது எம்.பி. அலுவலகத்தில் எம்.பி.யின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட சிலர் இருந்தனர். அவர்கள், மாணவர்களைக் கலைந்து போகச் சொல்லி மிரட்டினர். பின்னர் கம்பு கட்டைகளால் அவர்களைத் தாக்கி விரட்டியடித்தனர். இதில் மாணவர்கள் நால்வருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் பின்னர் பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதை அடுத்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நால்வரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.