வங்கதேச கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 1125 ஆனது
வங்கதேச தொழிற்சாலைக் கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 1125 ஆக உயர்ந்தது. விபத்து ஏற்பட்டு 19 நாட்கள் ஆன நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 15 உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன.
வங்கதேச தொழிற்சாலைக் கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 1125 ஆக உயர்ந்தது. விபத்து ஏற்பட்டு 19 நாட்கள் ஆன நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 15 உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன.
கடந்த ஏப்ரல் 24ம் தேதி ரானா பிளாஸா காம்ப்ளக்ஸில் 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவுப் பணியில் இருந்தபோது, கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. பிரிட்டனின் பிரிமார்க், ஸ்பெனின் மாங்கோ உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்களுக்காக இந்த நிறுவனம் ஆயத்த ஆடைகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்து வந்தது.