மதுரை - நெல்லை சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
திருநெல்வேலி - மதுரை சாலையில் சிந்துபூந்துரை உள்ளது. அந்த பகுதிக்கு உட்பட்ட நடுத்தெரு, வடக்குத் தெரு, மேற்கு தெரு அண்ணா நகர், செல்வியம்மன் கோயில் தெருக்கள் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பொதுக் கழிப்பறை பழுதடைந்து 6 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது.
திருநெல்வேலி - மதுரை சாலையில் சிந்துபூந்துரை உள்ளது. அந்த பகுதிக்கு உட்பட்ட நடுத்தெரு, வடக்குத் தெரு, மேற்கு தெரு அண்ணா நகர், செல்வியம்மன் கோயில் தெருக்கள் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பொதுக் கழிப்பறை பழுதடைந்து 6 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் கட்டித்தரப்படவில்லை. இதனால் 6 ஆண்டுகளாக அருகில் உள்ள வறண்ட குளத்தைப் பயன்படுத்தி வந்தனர். இப்போது அந்த குளமும் நிரம்பி விட்டதால் தங்களுக்கு கழிவறை வேண்டும் என்று கேட்டும் இதுவரை செய்து தரப்படவில்லை. குடிநீர் வசதியையும் செய்து தரப்படவில்லை என்று கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாநகராட்சி உதவி ஆணையர் சாமுவேல் செல்வராஜ் வந்து பொதுமக்களிடம் பேச்சு நடத்தினார். கழிவறை கட்ட டெண்டர் விடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அது கட்டித் தரப்படும் என்றும், குடிநீர் வசதி செய்யப்படும் என்றும் கூறினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.