நெல்லையில் குடிநீர் உற்பத்தியாளர்கள் உண்ணாவிரதம்
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், பசுமை தொழிற்சாலையாக குடிநீர் உற்பத்தி ஆலைகளை அறிவிக்க வேண்டும்
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், பசுமை தொழிற்சாலையாக குடிநீர் உற்பத்தி ஆலைகளை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை குடிநீர் உற்பத்தியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த குடிநீர் உற்பத்தியாளர்கள், நிறுவனப் பணியாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.