நெல்லையில் ரயில் மறியல் செய்ய முயன்ற 500 பேர் கைது
நெல்லை மாவட்டம், டவுன் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் மற்றும் கடைகளை அடைக்க வற்புறுதிய 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம், டவுன் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் மற்றும் கடைகளை அடைக்க வற்புறுதிய 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி தமிழகத்தில் இன்று சுமார் 21 அமைப்புகள் பங்கேற்கும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், நெல்லையில் ரயில் மறியல் மற்றும், டவுன் பகுதியில் கடையடைப்புக்கு முயன்ற மதிமுக, எஸ்டிபிஐ, கம்யூ. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.