சிதம்பரம் அருகே வாய்க்காலில் நீரில் மூழ்கி இறந்த முன்னாள் வார்டு உறுப்பினர்
சிதம்பரம் அருகே கிள்ளை காவல் சரகத்தில் உள்ள குச்சிப்பாளையத்தில் வசிப்பவர் கல்யாணசுந்தரம் (52). காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வார்டு உறுப்பினரான இவர் சனிக்கிழமை மாடு ஒன்று உப்பனாறு
சிதம்பரம் அருகே குச்சிப்பாளையத்தில் வாய்க்காலில் மூழ்கி முன்னாள் வார்டு உறுப்பினர் ஒருவர் இறந்தார்.
சிதம்பரம் அருகே கிள்ளை காவல் சரகத்தில் உள்ள குச்சிப்பாளையத்தில் வசிப்பவர் கல்யாணசுந்தரம் (52). காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வார்டு உறுப்பினரான இவர் சனிக்கிழமை மாடு ஒன்று உப்பனாறு வாய்க்காலில் சிக்கியதை மீட்க, வாய்க்காலில் இறங்கிய போது நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.