முகப்பு
தற்போதைய செய்திகள்

அனுமதியின்றி மணல் எடுத்து வந்த 7 மாட்டுவண்டிகள் பறிமுதல்

சிதம்பரம் நகருக்கு மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வருவதாக டிஎஸ்பி ஆர்.ராஜாராமிற்கு தகவல் வந்தது. அதன் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:54 PM
பகிர்:

வெள்ளாற்றிலிருந்து சிதம்பரத்திற்கு அனுமதியின்றி மணல் எடுத்து வந்த 7 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சிதம்பரம் நகருக்கு மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வருவதாக டிஎஸ்பி ஆர்.ராஜாராமிற்கு தகவல் வந்தது. அதன் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீஸார் வடக்குமெயின் ரோட்டில் வெள்ளிக்கிழமை காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிமம் இன்றி சிதம்பரம் அருகே உள்ள தாதம்பேட்டை வெள்ளாற்றிலிருந்து மணல் அள்ளி வந்த 7 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் நகர போலீஸார் சுரங்கச் சட்டத்தின் கீழ் ஆனந்த் (45)- சிதம்பரம், மணிகண்டன் (24)- மீதிகுடி, அசோக் (32)- கடவாச்சேரி, மேலமூங்கிலடியைச் சேர்ந்த கஜேந்திரன் (50), சாம்பமூர்த்தி (40), ராமலிங்கம் (25), மாஸ்கோ (45) ஆகிய 7 பேர் மீது வழக்குப் பதிந்து சிதம்பரம் உதவிஆட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.