45 மோட்டார் சைக்கிள்களை பிடித்த போக்குவரத்து போலீஸார்
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா உத்தரவின் பேரில் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.மலைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கே.கண்ணன், எம்.பிரகாஷ், ஆர்.ஞானசேகரன்
சிதம்பரம் நகரில் போக்குவரத்து போலீஸார் மோட்டார் சைக்கிள் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா உத்தரவின் பேரில் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.மலைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கே.கண்ணன், எம்.பிரகாஷ், ஆர்.ஞானசேகரன் மற்றும் போலீஸார் வெள்ளிக்கிழமை சிதம்பரம் நகரில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி திடீர் சோதனையிட்டனர். சோதனையில் ஆர்.சி.புக், லைசென்ஸ், இன்ஸ்யூரன்ஸ் இல்லாத 45 வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.