நவ.30, டிச.1-ல் சிதம்பரத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி!
சிதம்பரம் சதுரங்க சந்திப்புக்கழகம், கேசினோ மற்றும் வெளிச்சம் குழுமம் ஆகியவை இணைந்து நடத்தும் கடலூர் மாவட்ட அளவிலான 9-வது சதுரங்கப் போட்டி சிதம்பரம் வி.எஸ்.டி மண்டபத்தில் வருகிற நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
சிதம்பரம் சதுரங்க சந்திப்புக்கழகம், கேசினோ மற்றும் வெளிச்சம் குழுமம் ஆகியவை இணைந்து நடத்தும் கடலூர் மாவட்ட அளவிலான 9-வது சதுரங்கப் போட்டி சிதம்பரம் வி.எஸ்.டி மண்டபத்தில் வருகிற நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து சதுரங்க சந்திப்புக்கழக தலைவர் கேசினா எஸ்.சேகர் தெரிவித்தது: மாவட்ட அளவிலான 9வது சதுரங்க போட்டி நவ.30, டிச.1 ஆகிய இரு தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் நவ.30-ம் தேதி மாலை 6 மணிக்கு நடந்து முடிந்த உலக சதுரங்க போட்டியின் ஆய்வரங்கமும், டிசம்பர் 1-ம் தேதி மாலை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது.
போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் நவ.30ம் தேதி காலை 10 மணிக்குள் நுழைவு படிவங்களை அனுப்பி வைக்க வேண்டும். நுழைவு படிவங்கள் அண்ணாமலைநகர், அம்மாப்பேட்டை வெளிச்சம் கிளைகளிலும் மற்றும் அனைத்து கேசினோ கிளைகளிலும் கிடைக்கும் என எஸ்.சேகர் தெரிவித்துள்ளார்.
விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன்: 94423 18080.