முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜெனரேட்டர் புகையால் மூச்சு திணறி புதுமணத் தம்பதி மரணம்

ஜெனரேட்டர் புகையால் மூச்சு திணறி தம்பதி உயிரிழந்த சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:18 PM
பகிர்:

ஜெனரேட்டர் புகையால் மூச்சு திணறி தம்பதி உயிரிழந்த சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி, மேலப்பாளையம் பங்களப்பாநகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் ஆதம் பாஷா. இவரது மகள் கதீபா குல்நாஸ் (19). இவருக்கும், பேட்டையைச் சேர்ந்த முகமது சுலைமான் (25) என்பவருக்கும் 40 நாள்களுக்கு முன் திருமணம் நடந்தது.

பக்ரீத் பண்டிகைக்காக தனத தந்தை வீட்டுக்கு கணவருடன் வந்திருந்தார் கதீபா குல்நாஸ். புதன்கிழமை இரவு மின்தடை ஏற்பட்டதால் ஜெனரட்டரை இயக்கிவிட்டு அறையில் கணவன், மனைவி இருவரும் தூங்கியுள்ளனர். அப்போது, ஜெனரேட்டலிருந்து புகை வெளியேறி இருவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலப்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.