முகப்பு
தற்போதைய செய்திகள்

நவ.21 முதல் மதுரை-துபாய் விமான சேவை: மாணிக் தாகூர்

மதுரை விமான நிலையத்திலிருந்து நேரடியாக துபாக்கு நவ-21ம் தேதியிலிருந்து விமான சேவை தொடங்க இருப்பதாக மக்களவை

Updated On : 17 அக்டோபர், 2013 at 7:25 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:48 PM

மதுரை விமான நிலையத்திலிருந்து நேரடியாக துபாக்கு நவ-21ம் தேதியிலிருந்து விமான சேவை தொடங்க இருப்பதாக மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர் வியாழக்கிழமை  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை விமான நிலையம் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்தை தொடங்க வேண்டும் என தொழில் பிரமுகர்கள் மற்றும் வர்த்தகர்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில் மதுரை விமான நிலையத்திலிருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மூலம் கொழும்புக்கு நேரடியாக விமானச் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், நவ.21ம் தேதியிலிருந்து இங்கிருந்து துபாய்க்கு நேரடியாக விமானச் சேவை தொடங்கி, தொடர்ந்து நாள்தோறும் இயக்கப்பட இருக்கிறது.

    இந்த விமானம் மதுரையிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு நான்கரை  மணிநேரத்தில் துபாய் சென்றடையும். பின்னர் அங்கிருந்து அதிகாலையில் புறப்பட்டு 9.45-மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேரும். எனவே இந்த விமானச் சேவையின் மூலம் காய்கறிகள், மலர் வகைகள், மருத்துவப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கொண்டு செல்வதற்கு வர்த்தகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே தென்மாவட்டங்களில் இருந்து துபாய் பகுதியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் எளிதாக தங்களது சொந்த ஊர்களுக்கு வந்து செல்வதற்கு பயனுள்ளதாக விமானச் சேவை அமையும் என மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.