ஆசிரியர்களுக்கு சமுதாய விழிப்புணர்வு, பல்லூடகப் பாதுகாப்பு பயிற்சி
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வத்திராயிருப்பு வட்டார வளமையத்தில் தொடக்க நிலையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடகப் பாதுகாப்பு குறித்த பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வத்திராயிருப்பு வட்டார வளமையத்தில் தொடக்க நிலையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடகப் பாதுகாப்பு குறித்த பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் சர்வதேச மனப்பான்மையை வளர்த்து உலகக் குடிமகனாக்குதல். நன்னெறி முறையில் வாழும் திறன் வளர்த்தல். ஜனநாயகப் பண்புள்ள குடிமக்களை உருவாக்குதல். இயற்கை வளங்களைப் பாதுகாத்தல். சமூக வாழ்வியல் திறன் வளர்த்தல். நினைவாற்றலை அதிகரிக்கும் திறன் வளர்த்தல். குழந்தைகளின் உரிமைகள். தொலைக்காட்சி, கைபேசி, இணையம் உள்ளிட்ட பல்லூடகங்களினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியில் 103 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கருத்தாளர்களாக கண்ணன், மீனலோசினி, ஜெயலட்சுமி ஆகிய ஆசிரியப் பயிற்றுநர்கள் செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு.ஜெயலட்சுமி செய்திருந்தார்.