டேங்கர் லாரி மோதி பிளஸ் டூ மாணவர் சாவு
சிதம்பரம் அருகே மணலூர் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த மாணவர் ஹாஜகான் (17). இவரது தந்தை முகமதுசபீர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்ய மாணவர் ஹாஜகான் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக்
சிதம்பரம் வடக்குரதவீதியில் மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் பிளஸ்டூ மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிதம்பரம் அருகே மணலூர் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த மாணவர் ஹாஜகான் (17). இவரது தந்தை முகமதுசபீர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்ய மாணவர் ஹாஜகான் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலை சிறப்பு பள்ளியில் பிளஸ்டூ படித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் டியுஷனுக்கு வடக்குவீதி தலைமை தபால் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த டேங்கர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இவ்விபத்தில் மாணவர் ஷாஜகான் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.