வடகிழக்கு பருவ மழை தொடங்கியது: சேர்வலாறு அணை நீர்மட்டம் 4 அடி உயர்வு
தாமிரவருணி பாசனத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 4
தாமிரவருணி பாசனத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து ஞாயிற்றுக்கிழமை 91.37 அடியாக இருந்தது.
தாமிரவருணி பாசனத்தில் தென்மேற்கு பருவத்தில் கார் பருவ சாகுபடியும், வடகிழக்கு பருவத்தில் பிசான பருவ சாகுபடியும் செய்யப்படுகிறது. கார் பருவ சாகுபடி அறுவடை திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில தினங்களாக பெய்யும் மழையால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் பாபநாசம் அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பிசான பருவ சாகுபடிகளை தொடங்க வசதியாக விநாடிக்கு 600 கனஅடி தண்ணீ்ர் திறக்கப்பட்டது. சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மிதமான மழையால் அணைகளின் நீர்வரத்தில் மாற்றம் காணப்படுகிறது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 558.10 கனஅடி நீர்வரத்து இருந்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 81.00 அடியாக இருந்தது. அணையில் 8 மி.மீ மழையும் பாபநாசம் கீழ் அணையில் 16 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது. சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து நீர்மட்டம் 4 அடி உயர்ந்து, 91.37 அடியாக இருந்தது. அணையில் 3 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 14.2 மி.மீ மழையும் பெய்துள்ளது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 51.53 அடியாக இருந்தது. அம்பாசமுத்திரத்தில் 14.3 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 8 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 53.60 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 54.00 அடியாகவும் இருந்தது.