முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை மாவட்ட ஆட்சியராக கருணாகரன் பொறுப்பேற்பு

நெல்லை மாவட்ட ஆட்சியராக கருணாகரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் முன்னர் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:24 PM
பகிர்:

நெல்லை மாவட்ட ஆட்சியராக கருணாகரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் முன்னர் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தார்.

நெல்லை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட கருணாகரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். முன்னர் கோவையில் பொறுப்பில் இருந்தபோது, 90 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளேன்.

இங்கே நெல்லையிலும் தாதுமணல் விவகாரம், கூடங்குளம் உள்ளிட்ட போராட்டங்களும் சட்டம் ஒழுங்கு பிர்சனையில்தான் வரும். இந்த விவகாரங்களில் சட்ட விதிமீறல் படி யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது பாரபட்சன்றி நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் சிறப்பு நலத்திட்டங்களை கிராம மக்களுக்கு கொண்டு செல்வதில் முன்னுரிமை அளிப்பேன். மாவட்டத்தின்  வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்துவேன் என்றார்

திருநெல்வேலி மாவட்டம் பிரிந்த பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள 30வது ஆட்சியர் இவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.