வள்ளியூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: 2 குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சாவு
கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்களம், ஆலங்கோட்டை பகுதியை சேர்ந்த ராசையா. இவரது மனைவி பத்மாவதி. மற்றும் இதே பகுதியை சேர்ந்த கோவில்ராஜ். இவரது மனைவி கலைச்செல்வி.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே நால்வழிச்சாலையில் கார் கவிழ்ந்து புதன்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குடும்பத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலே இறந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்களம், ஆலங்கோட்டை பகுதியை சேர்ந்த ராசையா. இவரது மனைவி பத்மாவதி. மற்றும் இதே பகுதியை சேர்ந்த கோவில்ராஜ். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது மகன் சரவணன் (6) ஆகியோர் மாருதி காரில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர். காரை ராமன்புதூரை சேர்ந்த முருகன் ஓட்டினார்.வள்ளியூர் அருகே நால்வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அங்குள்ள பாலத்தை கடந்தபோது, கார் எதிர்பாராத விதமாக பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 வயது சிறுவன் உள்பட 6 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே இறந்தனர்.