அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்!
சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் கீழக்கரையில் அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனைக்காக வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சிதம்பரம் நகர போலீஸார் இன்று திடீர்
சிதம்பரம் நகரில் அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் கீழக்கரையில் அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனைக்காக வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சிதம்பரம் நகர போலீஸார் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தில்லை சேகர், செந்தில் ஆகியோரது வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.