முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் உதவிப் பேராசிரியர் வீட்டில் 8 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

சிதம்பரத்தில் உதவிப் பேராசிரியர் வீட்டின் பின்புறக்கதவு உடைக்கப்பட்டு, வீட்டுக்குள் இருந்த 8 பவுன் நகைகள், இரண்டரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டுப் போயுள்ளன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:32 PM
பகிர்:

சிதம்பரத்தில் உதவிப் பேராசிரியர் வீட்டின் பின்புறக்கதவு உடைக்கப்பட்டு, வீட்டுக்குள் இருந்த 8 பவுன் நகைகள், இரண்டரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டுப் போயுள்ளன.

சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் தனம்நகரில் வசிப்பவர் எம்.மாசிலாமணி (50). ஜெயங்கொண்டம் கே.கே.சி பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி கண்ணகி (42) ஸ்ரீமுஷ்ணம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக உள்ளார். இருவரும் வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டிக்கொண்டு பணிக்கு சென்றனர். மாலை வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் பின்புறக்கதவை உடைத்து மரம் ஆசாமிகள் உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 8 பவுன் நகைகள், இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாசிலாமணி கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். கடலூரிலிருந்து கைரேகை மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments