சேவூர் அருகே கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஒருவர் இன்று உயரிழந்தார்.
வேட்டுவபாளையம் ஊராட்சி, அ.குரும்பபாளையத்தைச் சேர்ந்த முருகப்பன் மகன் வெங்கடாசலம்(53), அரிசி வியாபாரி. இவர் தனது காரில் சேவூரில் இருந்து அ.குரும்பபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அ.குரும்பபாளையம் அருகே வரும் போது அவிநாசியில் இருந்து புளியம்பட்டி நோக்கிச் சென்ற அரசு பேருந்து கார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடாசலம் கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து சேவூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.