முகப்பு
தற்போதைய செய்திகள்

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் சாவு

சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் மெயின்ரோட்டைச் சேர்ந்த சையத்முகமது (49). இவர் திங்கள்கிழமை நள்ளிரவு கடலூரிலிருந்து பி.முட்லூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:36 PM
பகிர்:

சிதம்பரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.

சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் மெயின்ரோட்டைச் சேர்ந்த சையத்முகமது (49). இவர் திங்கள்கிழமை நள்ளிரவு கடலூரிலிருந்து பி.முட்லூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பூண்டியாங்குப்பம் எனுமிடத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சையத்முகமது படுகாயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு அங்கு இறந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →