முகப்பு
தற்போதைய செய்திகள்

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதல்: 2 பேர் பலி

கூடலூர் நியூஹோப் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் டியூக்ரவி மகன் டேனியல் ஜோஸ்வர(26), தற்போது கோவை, போத்தனூர் டிச்சர் காலனியில் குடியிருந்து வருகிறார். இவரது நன்பர் கோவை,

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:50 AM
பகிர்:

அவிநாசி அருகே தெக்கலூரில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இன்று சம்பவயிடத்திலே இரு இளைஞர்கள் உயரிழந்தனர்.

கூடலூர் நியூஹோப் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் டியூக்ரவி மகன் டேனியல் ஜோஸ்வர(26), தற்போது கோவை, போத்தனூர் டிச்சர் காலனியில் குடியிருந்து வருகிறார். இவரது நன்பர் கோவை, செல்வபுரம் தி்ல்லைநகரைச் சேர்ந்த ரமதுல்லா மகன் அப்துல் நாசர்(27). இவர்கள் இருவரும் திருப்பூர் பனியன் தொழிலாளார்கள். இந்நிலையில் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி இருவரும் இருசக்கர வாகனத்தில் அவிநாசி வழியாக வந்து கொண்டிருந்தனர். தெக்கலூரி புறவழிச்சாலை மேம்பாலம் அருகே வரும் போது, ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த டேனியல் ஜோஸ்வா, அப்துல் நாசர் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments