மதுரையில் பூட்டிய வீட்டில் கொள்ளை: போலீஸார் ரோந்து அதிகப் படுத்த மக்கள் கோரிக்கை
மதுரை திருப்பரங்குன்றம் அருகே ஆர்வீபட்டியில் பூட்டிய வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே ஆர்வீபட்டியில் பூட்டிய வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.
ஆர்வீபட்டியைச் சேர்ந்தவர் காளியரத்தினம். இவர் வணிக வரித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று இரவு வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியில் சென்றிருந்தாராம். அதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டுக்குள் புகுந்து, 4 பவுன் நகை 4 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.
கடந்த பத்து நாட்களாக ஆர்வீபட்டி, திருநகர், அவனியாபுரம் பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளை அடிப்பது தொடர்கதை ஆகி வருகிறது. எனவே, இந்தப் பகுதிகளில் போலீஸார் ரோந்துப் பணிகளை அதிகப் படுத்த வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.