ஊதியம் வழங்க கோரி கல்லூரி கவுரவ விரிவையாளர்கள் வாயில் முழக்கப் போராட்டம்
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள், கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினர்.
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள், கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினர்.
சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியமின்றி பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக கடந்த 5 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடன் வழங்க வேண்டும், பணி நீட்டிப்பு ஆணை உடன் வழங்க வேண்டும், யுஜிசியின் அடிப்படை ஊதியம் ரூ.15.600-ஐ வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வாயில் முன்பு வியாழக்கிழமை கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த்துறை விரிவுரையாளர் முனைவர் க.வெற்றிவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 20 கவுரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.
Advertisement