முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழிப்பறி வழக்கில் கைதாகி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை இரவு பரிசோதனைக்காக வந்த கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையைச் சேர்ந்த பென்சாம் (43) பயிற்சி மருத்துவர்களை தாக்கியதால் மருத்துவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக புதன்கிழமை பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பணிகளை புறக்கணித்து மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.