இஎஸ்ஐ மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகை
திருநெல்வேலி, பேட்டையில் இஎஸ்ஐ அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு வழங்கப்படும் மருந்துகள் தரமற்றவையாக இருப்பதாகவும், காலாவதி மருந்துகளை வழங்குவதாகவும், திரவ மருந்துகள்
தரமற்ற மருந்துகள் இல்லாததைக் கண்டித்து பேட்டை அரசு மருத்துவமனையை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி, பேட்டையில் இஎஸ்ஐ அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு வழங்கப்படும் மருந்துகள் தரமற்றவையாக இருப்பதாகவும், காலாவதி மருந்துகளை வழங்குவதாகவும், திரவ மருந்துகள் இறுகி பாட்டிலில் இருந்து வெளியே வராத நிலையில் உள்ளதாகவும் புகார் கூறி 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.