நெல்லையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் 3 ஆவது நாளாக நீடிப்பு
பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாவலர் நியமிக்கக் கோரி பயிற்சி மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடிக்கிறது.
பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாவலர் நியமிக்கக் கோரி பயிற்சி மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடிக்கிறது.
தங்களது போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், இதர கல்லூரி மாணவர்களிடமும் பயிற்சி மருத்துவர்கள் ஆதரவு திரட்டி வருவதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.