இளைஞரை அடித்துக்கொன்ற முதியவர் கைது
பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் குமார் (எ) சிவக்குமார் (30). இவர், சாலையோரங்களில் உள்ள பழைய பேப்பர்களை
பெரம்பலூரில், இளைஞரை அடித்துக்கொலை செய்த முதியவரை பெரம்பலூர் போலீஸôர் புதன்கிழமை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் குமார் (எ) சிவக்குமார் (30). இவர், சாலையோரங்களில் உள்ள பழைய பேப்பர்களை பொறுக்கி இரும்பு கடையில் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 21ம் தேதி மாலை 6 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் செல்லும் சாலையில் உள்ள வீரமுத்து மகன் ரவி ( 50) வீட்டின் அருகே சிவக்குமார் பேப்பர் பொறுக்கிக்கொண்டிருந்தபோது, ரவி வீட்டின் அருகே கிடந்த இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டாராம்.
இதையறிந்த ரவி இரும்பு கம்பியால் தாக்கியதில், பலத்த காயமடைந்த சிவக்குமார் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையிலில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை காலையில் சிவக்குமார் உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது தாய் செல்லம்மாள் (58) அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து, ரவியை புதன்கிழமை கைது பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், ரவியை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, சிவக்குமாரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.