முகப்பு
தற்போதைய செய்திகள்

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் : நகை, பணம் கொள்ளை

மேலூர் பகுதியில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், வீட்டில் இருந்த பெண்களை மிரட்டி நகை, பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:06 AM
பகிர்:

மேலூர் பகுதியில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், வீட்டில் இருந்த பெண்களை மிரட்டி நகை, பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் - சிவகங்கை சாலையில் உள்ளது சின்னப்பெருமாள் பட்டி கிராமம். இங்குள்ள மர வியாபாரி அழகர் வீட்டுக்குள் நள்ளிரவு பனிரெண்டு மணியளவில் புகுந்த 3 முகமூடி திருடர்கள் அழகரின் மாமியாரை கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டுக்குள் புகுந்தனர்.

அங்கிருந்த அழகரின் மனைவி தேவியிடம் (48) கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம் எங்கிருக்கிறது என்று கேட்டுள்ளனர். எல்லாம் அடமானத்தில் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் அணிந்திருந்த கம்மல், செயின் உட்பட 5 பவுன் நகைகளைப் பறித்துக் கொண்ட கொள்ளையர்கள் பீரோவில் இருந்த பணம் மற்றும் 2 செல்போனை எடுத்துக் கொண்டு கதவை வெளிப்புறமாக தாழ்போட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.

இது குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோப்ப நாயின் உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →