டிவி பார்ப்பதை தாயார் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை
திருபுவனை அருகே வீட்டில் டிவி பார்ப்பதை தாயார் கண்டித்ததால் பிளஸ் டு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
திருபுவனை அருகே வீட்டில் டிவி பார்ப்பதை தாயார் கண்டித்ததால் பிளஸ் டு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
சகடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வாட்டர் டேங்க் ஆப்ரேட்டர் தங்கராசு. இவரது மகள் முத்தம்மா (17). இவர் பி.எஸ்.பாளையத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் டு படித்து வந்தார்.
இநநிலையில் சனிக்கிழமை அவர் எந்த வேலையும் செய்யாமல் டிவி பார்த்துக் கொண்டிருந்தாராம்.
அவரது தாயார் அவரைக் கண்டித்தார். இதனால் மனமுடைந்த முத்தம்மா அரளி விதை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருபுவனை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.