முகப்பு
தற்போதைய செய்திகள்

வேப்பங்குப்பம் அருகே அடையாளம் தெரியாத லாரி மோதி 4 வயது சிறுமி சாவு

வேப்பங்குப்பம் அருகே மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த அருண்குமார் என்பவரின் 4வயது மகள் திரிஷா வீட்டிற்கு வெளியே ஆசனாம்பட்டு - ஒடுக்கத்தூர்

Updated On : 30 ஆகஸ்ட், 2014 at 7:58 PM
பகிர்:

 வேப்பங்குப்பம் அருகே அடையாளம் தெரியாத லாரி மோதிய விபத்தில் 4 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை இறந்தது.

வேப்பங்குப்பம் அருகே மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த அருண்குமார் என்பவரின் 4வயது மகள் திரிஷா வீட்டிற்கு வெளியே ஆசனாம்பட்டு - ஒடுக்கத்தூர் சாலையில் விளையாடிக் கொண்டிருந்ததாம்.  அப்போது அவ்வழியாக சென்ற ஒரு லாரி சிறுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.  சிறுமி சம்பவ இடத்திலேயே இறந்தது.  வேப்பங்குப்பம் போலீஸôர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  வழக்கு பதிந்து நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.