சிதம்பரம் அருகே ரயில் முன் பாய்ந்து பிஇ மாணவர் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சுந்தரம்சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த சேது என்பவரது மகன் ரஞ்சித் (24). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2009-2013ல் பிஇ
சிதம்பரம் அருகே அண்ணாமலைப் பல்கலையில் படித்து முடித்த பிஇ மாணவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சுந்தரம்சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த சேது என்பவரது மகன் ரஞ்சித் (24). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2009-2013ல் பிஇ எல்க்டிரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். பின்னர் வேலை கேட்டு அலைந்த போது இவரது சான்றிதழ்கள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. சான்றிதழ் காணாமல் போனது குறித்து வீட்டிற்கு தெரிவிக்காமல், சான்றிதழ்களை தேடி மாணவர் ரஞ்சித் சுற்றித் திரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவர் ரஞ்சித் ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் சரகத்தில் உள்ள உசுப்பூர் ரயில்கேட் அருகே திருச்சியிலிருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சிதம்பரம் ரயில்வே போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.