போலீஸ்காரர் மனைவியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
திருச்சி பொன்மலை அருகே புதன்கிழமை நள்ளிரவு போலீஸ்காரர் மனைவியிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
திருச்சி பொன்மலை அருகே புதன்கிழமை நள்ளிரவு போலீஸ்காரர் மனைவியிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
கீழக்குறிச்சி பெரியார் நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் காந்தி சந்தை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா, வெளியூர் சென்றிருந்த இவர்,புதன்கிழமை நள்ளிரவு பொன்மலை ரயில் நிலையத்திலிருந்து தனது சகோதரர் உடன் இருசக்ககர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
பொன்மலை இருபாலர் மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், ஜெயசித்ரா அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது ஜெயசித்ரா தனது தாலி சங்கிலியை இறுக்கி பிடித்து கொண்டதில் சங்கிலி பாதியாக அறுந்தது. அதனை அந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இது குறித்து பொன்மலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Advertisement