முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆம்பூர் அருகே 3 கோயில்களின் உண்டியல் உடைத்து திருட்டு

ஆம்பூர் அருகே 3 கோயில்களின் உண்டியல்களை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

Updated On : 12 டிசம்பர், 2014 at 11:14 AM
பகிர்:

ஆம்பூர் அருகே 3 கோயில்களின் உண்டியல்களை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆம்பூர் அருகே ரால்லகொத்தூர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு 60 ஆயிரம் ரூபாய் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர். 

அதே போல் வீராங்குப்பம் விநாயகர் கோவில், பாரத பெருமாள் கோவில் ஆகிய 2 கோயில்களிலும் தலா 5 ஆயிரம் ரூபாய் வரையிலான உண்டியல் பணம் திருடப்படுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.