முகப்பு
தற்போதைய செய்திகள்

11 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது போலீஸில் புகார்

  பள்ளிகொண்டா அருகே 11 வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது காதலி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸில்

Updated On : 17 டிசம்பர், 2014 at 6:02 PM
பகிர்:

  பள்ளிகொண்டா அருகே 11 வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது காதலி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸில் செவ்வாய்க்கிழமை புகார் செய்தார்.

பள்ளிகொண்டா அருகே உள்ள திப்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். அவரது மகள் பட்டதாரி லதா (30). அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராஜ்குமார் (32) .  இருவரின் விவசாய நிலமும் அருகருகே அமைந்துள்ளது. நிலத்துக்கு செல்லும் போது லதாவும், ராஜ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 11 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர், ராஜ்குமார் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் தனிமையில் இருந்துள்ளார். 

இந்நிலையில் ராஜ்குமார் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.  11 ஆண்டுகளாக காதலித்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுத்ததால் இதுகுறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸôர் வழக்குபதிவு செய்து  விசாரணை நடத்தி  வருகின்றனர்.                                                                              

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.