கரூர் அருகில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் இருந்ததை பொதுமக்கள் உரிய நேரத்தில் கண்டுபிடித்து தகவல் அளித்தனர். இதனால் ரயில் ஒன்று பெரிய விபத்தில் இருந்து தப்பியது.
கரூர் அருகே சனப்பிரட்டி என்ற இடத்தில் ஆள் இல்லாத ரயில்வே கிராஸிங்கில், தண்டவாளத்தில் ஒரு இன்ச் விரிசல் இருந்ததை பொதுமக்கள் கண்டறிந்து, ஊழியர்களுக்குத் தகவல் அளித்தனர். ரயில் ஊழியர்கள் சென்று உடனே பார்த்து அதனை சரி செய்தனர். அந்த நேரம் கோவையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ஜனசதாப்தி ரயில் வந்து கொண்டிருந்தது. ஊழியர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், அது அங்கேயே நிறுத்தப்பட்டு, 15 நிமிடம் தாமதமாகச் சென்றது. இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.