முகப்பு
தற்போதைய செய்திகள்

திருநாரையூர் கோயிலில் அப்பர் தொண்டு நிறுவன நூறாவது உழவாரப்பணி

சிதம்பரம் அருகே உள்ள திருநாரையூர் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் கோயிலில் அப்பர் தொண்டு நிறுவனத்தின் நூறாவது உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள திருநாரையூர் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் கோயிலில் அப்பர் தொண்டு நிறுவனத்தின் நூறாவது உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தொண்டு நிறுவன நிர்வாகிகள் என்.காளிதாஸ், ஜோதிமகாலிங்கம், சுப்ரமணியன், நளினி, கண்ணன், அமுதா, வெங்கடாஜலம் உள்ளிட்ட 80 சிவனடியார்கள் பங்கேற்று கோயில் வளாகத்தில் உள்ள முட்புதர்கள், செடி, கொடிகளை அகற்றினர். மேலும் கோயில் வளாகம் முழுவதும் நீரினால் கழுவி சுத்தம் செய்தனர். பின்னர் சிவபூஜையும், திருமுற்றோதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை, சொற்பொழிவு, மாகேஸ்வரபூஜை ஆகியவை நடத்தப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. உழவாரப்பணி ஏற்பாடுகளை அப்பர் தொண்டு நிறுவன செயலாளர் வி.சந்திரசேகரன் செய்திருந்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments