விசாரணைக்கு ஆஜராகாத கொலைக் குற்றவாளி கைது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெருமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மனைவி அஞ்சலம் (60). இவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் கைதாகி
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:00 AM
கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெருமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மனைவி அஞ்சலம் (60). இவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த கருப்புசாமி(25). கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம் கருப்புசாமிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. திட்டக்குடி இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் போலீஸôர், அரியலூர் மாவட்டம், மாத்தூர் கிராமத்தில் பதுங்கியிருந்த கருப்புசாமியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.