சிதம்பரம் வழியாக அதிக லோடுடன் சென்ற 13 டிப்பர் லாரிகளுக்கு அபராதம்!
சிதம்பரம் வழியாக அதிகமான ஜல்லி, கருங்கற்கள் ஆகியவற்றை அதிகமான லோடுடன் ஏற்றிச் சென்ற 13 டிப்பர் லாரிகளை போலீஸார் கைப்பற்றி, வழக்குப் பதிந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.
சிதம்பரம் வழியாக அதிகமான ஜல்லி, கருங்கற்கள் ஆகியவற்றை அதிகமான லோடுடன் ஏற்றிச் சென்ற 13 டிப்பர் லாரிகளை போலீஸார் கைப்பற்றி, வழக்குப் பதிந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.
சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் போலீஸார் புதன்கிழமை இரவு வண்டிகேட் பகுதியில் புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவக்கரையிலிருந்து சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகள் சாலை அமைக்கும் பணிக்காக ஜல்லி, சிப்ஸ், பாறாங்கற்கள் ஆகியவற்றை அதிக லோடுடன் ஏற்றிச் சென்ற 13 டிப்பர் லாரிகளை பிடித்தனர். மேலும் பின்னர் சிதம்பரம் நகர போலீஸார் அதிக லோடுடன் சென்றதாக வழக்குப் பதிந்து 13 லாரிகளுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதத் தொகை வசூலித்து அனுப்பி வைத்தனர்.