முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே பொதுமக்கள் பிடித்த 5 அடி நீள முதலை!

சிதம்பரம் அருகே அள்ளூர் கிராமத்தில் உள்ள பாழ்வாய்க்காலில் 5 அடி நீளமும், 35 கிலோ எடை கொண்டு முதலை இருந்து கொண்டு அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து புதன்கிழமை

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:30 AM
பகிர்:

சிதம்பரம் அருகே வாய்ய்காலில் இருந்து கொண்டு பொதுமக்களை அச்சுறுத்திய 5 அடி நீள முதலையை அப்பகுதி மக்கள் பிடித்து தீயணைப்பு மீட்புத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சிதம்பரம் அருகே அள்ளூர் கிராமத்தில் உள்ள பாழ்வாய்க்காலில் 5 அடி நீளமும், 35 கிலோ எடை கொண்டு முதலை இருந்து கொண்டு அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து புதன்கிழமை முதலையை பிடித்து கட்டிப்போட்டு, சேத்தியாத்தோப்பு தீயணைப்புத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர். பின்னர் தகவலின் பேரில் சிதம்பரம் வனச்சரக எல்.ரவிக்குமார் மற்றும் வனத்துறையினர் சென்று முதலையை பெற்று சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.