சிதம்பரத்தில் உரிமம் இன்றி மருத்துவம் பார்த்த ஒருவர் கைது
சிதம்பரம் பொன்னம்பலநகரைச் சேர்ந்த சரவணன் (38). இவர் அரசு அனுமதியின்றியும், உரிமம் இன்றியும் அப்பகுதியில் உடல்நலம் சரியில்லாமல் வருபவர்களுக்கு ஊசி போடுவதாக போலீஸாருக்கு
சிதம்பரம் நகரில் அரசு அனுமதி மற்றும் உரிமம் இன்றி மருத்துவம் பார்த்த ஒருவரை நகர போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சிதம்பரம் பொன்னம்பலநகரைச் சேர்ந்த சரவணன் (38). இவர் அரசு அனுமதியின்றியும், உரிமம் இன்றியும் அப்பகுதியில் உடல்நலம் சரியில்லாமல் வருபவர்களுக்கு ஊசி போடுவதாக போலீஸாருக்கு புகார் வந்தது. தகவல் அறிந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் உள்ளிட்டோர் சென்று சரவணனை கைது செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் புகாரின் பேரில் நகர போலீஸார் சரவணன் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.