சிதம்பரத்தில் ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை
சிதம்பரத்தில் ரயில் முன் பாய்ந்து 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரத்தில் ரயில் முன் பாய்ந்து 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம் பஸ்நிலையம் பின்புறம் பாலமான் வாய்க்கால் அருகே ரயில்வே பாதையில் புதன்கிழமை காலை 9.40 மணிக்கு விழுப்புரம்-மயிலாடுதுறை சென்ற சரக்கு ரயில் முன்பு 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போனவர் வெள்ளை வேட்டி, வெள்ளை முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார். அவரது சட்டை பையில் இருந்த சீட்டில் சீர்காழி மங்கைமடம் என்ற விபரம் இருந்தது. இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.