நெல்லையில் மாநகராட்சி அலுவலகம் திடீர் முற்றுகை
போலீஸாரின் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை சிறுவியாபாரிகள் திங்கள்கிழமை திடீரென முற்றுகையி்ட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸாரின் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை சிறுவியாபாரிகள் திங்கள்கிழமை திடீரென முற்றுகையி்ட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி நகரம் 42 ஆவது வார்டு கரியமாணிக்கப்பெருமாள் கோயில் தெரு பகுதியில் அப்பகுதியை சேர்ந்த சிறு வியாபாரிகள் நடைபாதையில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அங்கு மாலை நேரங்களில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளிடம், அங்கு கடைகள் வைத்து வியாபாரம் செய்யக்கூடாது என போலீஸார் தெரிவித்தனராம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள், பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து வருவதாகவும், கடைகள் திறக்காவிடில் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்து வியாபாரிகள் 50 க்கும் மேற்பட்டோர் மாநகராட்சியை முற்றுகையிட்டனர்.பின்னர் மாநகராட்சி ஆணையர் அர. லட்சுமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்பகுதியை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.