முகப்பு
தற்போதைய செய்திகள்

தலை பெரிதாக இருந்ததால் பெண் குழந்தையைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்

கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே சீத்தகாட்டனூர் என்ற இடத்தில், குழந்தைக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலைக்கு முயன்றார் வளர்மதி ஒரு பெண். இதில், அந்தக் குழந்தை இறந்தது. பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:45 AM
பகிர்:

கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே சீத்தகாட்டனூர் என்ற இடத்தில், குழந்தைக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலைக்கு முயன்றார் வளர்மதி ஒரு பெண். இதில், அந்தக் குழந்தை இறந்தது. பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

குழந்தை பிறந்தபோது தலை சற்று பெரிதாக இருந்ததாம். இதனால் குழந்தைக்கு வளர்ச்சி சரியாக இருக்காது என்ற வருத்தத்தில் இருந்தாராம். குழந்தை இவ்வாறு கவனிப்பு இல்லாமல் பிறந்ததற்கு தனது மாமியாரும் தாயும்தான் காரணம் என்று புலம்பிக் கொண்டிருந்தாராம்.

இந்நிலையில் வளர்மதி தனது 4 மாதக் குழந்தை சுர்ஜிதாவுக்கு விஷம் கொடுத்து, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஷம் கொடுத்த குழந்தை இறந்துவிட்டது. தற்கொலைக்கு முயன்றவரை மருத்துவமனையில் அருகில் உள்ளோர் சேர்த்துள்ளனர். அவர் உயிர் பிழைத்துவிட்டார் என்றாலும் சிகிச்சையில்  உள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.